Tuesday 2 February 2021

 

புனைவுக்கட்டுரைகளின் முகவுரைகள்.


1. கறுத்தக் கொழும்பான்

  • ஜெயமோகன்

2. செல்லப்பாக்கியம் மாமியின் முட்டிக் கத்தரிக்காய்.

  • வாசந்தி
  • வ. மகேஸ்வரன்
  • தி. ஞனசேகரன்


1. கறுத்தக் கொழும்பான்ஜெயமோகன்.


பயணியின் புன்னகை: 

ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

பயணியின் புன்னகை: ஆசி கந்தராஜாவின் கறுத்தக் கொழும்பான் நூல் பற்றி ஜெயமோகன்….

 

ங்களூரில் அந்தக் காலத்தில் பட்டாளத்துக் காரர்கள் தான் உலகச் சாளரங்கள். வடசேரி கனகமூலம் சந்தைக்கு காய்கறி வாங்கச்செல்வது, சுசீந்திரம் தேர்த்திருவிழா, திருவந்தபுரம் பத்மநாபசாமி ஆறாட்டுவிழாவுக்குச் செல்வது தவிர எங்களூரில் பயணம் மேற்கொள்பவர்கள் அரிது. பெரும்பாலானவர்கள் ‘என்ன சாமி சொல்லுகது? குளித்துறைக்கு அப்புறம் ராச்சியமில்லை. தேங்காப்பட்டினம் கடலாக்கும் ’ என நம்புகிறவர்கள்

அப்படிப்பட்ட சூழலில் இரும்பு லாடம் கட்டிய சப்பாத்துகளும் பச்சைக்கம்பிளிச் சீருடையும் டிரங்குப்பெட்டியுமாக வரும் பட்டாளத்துக்காரர்கள் அச்சமும் ஆர்வமும் ஊட்டும் அபூர்வப்பிறவிகள். அவர்களில் சிலர் லடாக் வரைக்கும் சென்றவர்கள். பனிமலைகளையும் பாலைவனங்களையும் கங்கையையும் பிரம்மபுத்திராவையும் பார்த்தவர்கள். ரேஷன் வந்துசேராமல் பன்னிரண்டு நாள்வரை பட்டினி கிடந்தவர்கள். படுகாயம்பட்ட காலுடன் நூறு கிலோமீட்டர் நடந்தவர்கள். பட்டாளத்தான் வந்துவிட்டால் ஊரே சுற்றிலும் திரண்டுவிடும்.